தமிழ், சிங்கள மக்கள் ஆகிய இரு தரப்பினருடனும் நீங்கள் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளீர்கள். உங்கள் முக்கிய அவதானிப்புகள் என்ன?
இன்றைய அரசியல் சூழலில், மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில், இந்த அரசு மக்களின் ஆணையை மதித்து செயல் படுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. இதுதமிழ் மக்களிடமும், தென் இலங்கையில் வாக்களித்த மக்களிடமும் ஒரே மாதிரியான கேள்வியாக உள்ளது.
நான் ஆரம்பத்தில் ஜே.வி.பியுடன் (JVP) இணைந்து செயல்பட்டேன். ஆனால், அந்த அமைப்பு இனவாத பாதையைஎடுத்தபோது, அதற்கு எதிராக நாங்கள் செயல்பட்டோம். எந்த அமைப்பாக இருந்தாலும், அது காலத்தின் போக்கில்மாறக்கூடியது; ஒருகாலத்தில் முன் னேற்ற சக்தியாக இருந்தாலும், பின்னர் பின்ன டைவு அடையும் வாய்ப்பும் உண்டு. அதேபோல், ஜே.வி.பியையும் நாங்கள் பார்க்க வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற பாரம்பரிய கட்சிகள் தங்கள் பழைய சித்தாந் தத்தையே தொடர்கின்றன. ஆனால்ஜே.வி.பி. வித்தியாசமானது. அது விமர்சனமும் சுயவிமர் சனமும் செய்து, சித்தாந்த ரீதியில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளர்ந்தது. இரண்டு முறை ஆயுத கிளர்ச்சிகளில் ஈடுபட்ட அந்த இயக்கம், முன்னர் ஆயுதப்போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு இருந்தது. ஆனால் இன்று, அது பாராளுமன்ற ஜனநாயகத்தின் வழியாக ஆட்சியில் பங்கேற்கத் தயாரான அமைப் பாக மாறியுள்ளது.
இதனால், ஜே.வி.பியை ஒரு சாதாரண பாரம்பரிய கட்சியாக பார்க்காமல், மாற்றத்தைக் கற்றுக்கொண்டு, புதியசூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்ட அரசியல் இயக்கமாக நாம் பார்க்க வேண்டும். இன்றைய நிலையில், அது சுதந்திர ஜனநாயகத்தின் கட்டமைப்புக்குள் அரசி யலுக்கு தன்னை இணைத்துக் கொண்டுள்ளது என்பதே முக்கியம்.
இன்றைய சூழலில், இடதுசாரி தலைமை யிலான அரசாங்கம் முதன்முறையாக லிபரல் ஜனநாயக கட்டமைப்புக்குள் நுழைந்துள்ளது. ஆனால், அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என்ற பொதுமக்கள் குற்றச் சாட்டுஅதிகரிக்கிறது. இது, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்குள் மட்டுமே இயங்க வேண்டியநிலைமையால் வருகிறது.
அரசாங்கம் கடந்த 10 மாதங்களில் சில மாற்றங்களை செய்திருந்தாலும், பல விஷயங் களை முன்னேற்றுவதற்குசட்டரீதியான கால அவகாசமும் அவசியம். அதே நேரத்தில், அரசாங்கம் தந்திர ரீதியில் தடைகளை கடந்து செல்லவேண்டியுள்ளது. குறிப்பாக, இன வாத சக்திகளை எதிர்கொள்வதில் அவர்கள் முழுமையாக வெற்றி பெறவில்லை, சில விஷயங்களில் சிக்கல்களை சந்தித்தாலும், சில வற்றை திறமையாக கடந்து வருகின்றனர்.
இலங்கையின் அரசியல் கட்டமைப்பு, குறிப்பாக இனவாத பிரச்சனைகளை சட்டரீதியாகத் தீர்க்க இயலாதபடிஅமைந்துள்ளது. இதனால், அரசு எல்லா தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் நிறை வேற்ற முடியாமல் தடுமாறுகிறது.
தமிழ் சமூகத்துக்குப் பொது பிரச்சினை என்னவென்றால், தென்னிலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றங்கள்அவர்களுக்கு சரியாகச் செல்லவில்லை. சிங்கள மொழி ஊடகங்களில் வெளிப்படும் தகவல்கள் தமிழில்கிடைக்காததால், அரசின் நடவடிக்கைகள் தமிழ் மக்களிடம் தவறாகப் புரியப்படுகிறது. இதனால், “அரசாங்கம்எதையும் செய்யவில்லை” என்ற நம்பிக்கை உருவாகிறது.
ஆகவே, அரசாங்கம் சில முன்னேற்றங்களை எட்டியிருந்தாலும், தகவல் பரிமாற்றத் தடைகள் மற்றும் சட்ட ரீதியானகட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் தோல்வியடைந்தது போல தோன்றுகிறது. உண்மையில், நிலைமையைசரியாக புரிந்துகொள்ளாமல், முழுமையான ஏமாற்றம் என்ற போக்கே தமிழ் சமூகத்தில் அதிகமாக உள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் ஆசைகள், பிரச்சனைகள், இராணுவமயமாக் கல், பௌத்தமயமாக்கல் போன்ற விடயங்கள் தெற்குமக்களிடம் போய் சேருகின்ற னவா? அவர்கள் இதைப்பற்றி தெளிவாக அறிந்து கொள்கிறார்களா?
இலங்கையில் சிங்கள பௌத்த தேசியவாதம் கடந்த காலத்தில் எளிதாக மக்களிடம் விற்கப்பட்டதால், ஊடகங்கள் அதைப் பயன்படுத்தி சமுதாயத்தை ஊழல் மற்றும் தீவிரவாத பாதைக்கு தள்ளின. இதேபோன்று, தமிழ் சமூகத்திலும் தேசியவாதம் எளிதாக விற்கப்பட்ட ஒரு அரசியல் கருவியாக மாறியது.
தமிழ் உரிமை தேவையும் அரசியல் இடமும் உண்மையில் இருந்தாலும், கண்மூடித் தனமான தேசியவாதம் மக்களை தவறான முடிவுகளுக்குத் தள்ளியது. இதனால் இரு சமூகங்களிலும் உண்மையை அறியாத பொது மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். எனது பார்வையில், சிங்களத்திலும் தமிழிலும் தகவல் சிக்கல்கள் தொடர்ந்ததால், இரு சமூகங்களுக்கும் நீண்டகாலபிரச்சினை நிலைத்திருக்கிறது.
ஆனால், பௌத்த அடிப்படைவாத சிந்தனை இருக்கும் வரைக்கும், இந்த பிரச்சனைகள் வந்து ஒரு சுகமான முறையில் தீரும்என்று நினைக்கின்றீர் களா?
இலங்கை அரசு அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. கட்சிகள்மாறினாலும், அந்த அடித்தள சித்தாந்தமே அரசை இயக்குகிறது. எனவே பிரச்சனை நபர்களோ அரசியல் சக்திகளோஅல்ல. பேரினவாத சித்தாந்தமே அடிப்படை பிரச்சனை. இது நீண்டகாலமாக ஒரு பெரிய செயல்முறையின் மூலம்சமூகத்தில் வேரூன்றியது.
இந்த நிலையை மாற்ற, அதேபோல் ஒரு நீண்டகால செயல்முறை அவசியம். ஒரே அரசாங்கம் அல்லது ஒரேதலைமையால் அதை முழுமையாக மாற்ற இயலாது. அதனால், எந்தக் கட்சி தலைமை தாங்கினாலும் பேரினவாதஅரசின் கட்டமைப்புக்குள் செயல்பட வேண்டியிருக்கும்.
ஆனால், தற்போதைய NPP அரசு முந்தைய அரசுகளுடன் ஒப்பிடும்போது கணிசமான மாற் றங்களை ஏற்படுத்தும் திறன்கொண்டதாக தெரிகிறது. பெரிய மாற்றம் சாத்தியமா என்ற சந்தேகம் இருந்தாலும், இதுவரை இல்லாத சிலமுன்னேற்றங்களை அவர்கள் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக, ரணில் விக்ரமசிங்க போன்ற “மேட்டுக்குடி அரசியல்வாதி” ஆட்சியில் இடம்பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது நாட்டின் அரசியல் மாற்றத் தில் ஒரு புதிய கட்டத்தைசுட்டிக்காட்டுகிறது.
ரணில் விக்ரமசிங்க உண்மையில் ஊழலுக்காகத் தானா கைது செய் யப்பட்டார், இல்லையெனில் NPP அரசின் அரசியல்யுக்தியா?
இலங்கையில் ரணில் விக்ரமசிங்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. முன்னர் ஜனாதிபதி அல்லது உயர்ந்த அரசியல்வாதிகள் மீது கை வைக்க முடியாது என்ற நிலைமை நிலவியது. ஆனால்இப்போது, குற்றச்சாட்டு இருந்தாலே நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கான சுட்டுமாதிரியாக இது மாறியுள்ளது. இதனால், குற்றச்சாட்டு உள்ள பலரும் சட்ட வலையில் சிக்கக்கூடும் என்ற அச்சத்தால் எதிர்ப்பு குரல் கொடுக்கிறார்கள். அரசாங்கம் அரசியல் தலையீடு செய்யாமல், நீதித்துறை மற்றும் சட்டத்துறைக்கு முழு சுதந்திரம் வழங்குவோம் என்றுஉறுதியளித்திருப்பது, இந்த செயல்முறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் சிங்கள தலைவர்களைப் பற்றி சிங்கள மக்களின் அபிப்பிராயம் என்ன?
ரணில் கைது சம்பவத்துக்குப் பிந்தைய சிங்கள சமூகத்தின் எதிர்வினை அரசுக்கு சாதகமாகவே இருந்தது. எதிர்க்கட்சிகள்பெரும் அளவில் எதிர்ப்பை ஏற்படுத்துவார்கள் என நினைக்கப்பட்டாலும், அது நடக்கவில்லை, சில சிறிய குழுக்கள் மட்டுமேதெருக்களில் காணப்பட்டனர். மாறாக, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் ரணில் கைது நியாயம் என வலியுறுத்தும்தரப்புகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தின. இதனால், மக்களிடையே ஒருவகை ஒற்றுமை ஏற்பட்டது.
தென்னிலங்கையின் பெரிய அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவாளர்களை நிலைநிறுத்தியு ள்ள நிலையில், மக்களைஅடிப்படையில் கவர்ந்திருப்பது இன்னும் ஜேவிபி (JVP) மற்றும் என்பிபி (NPP) மட்டுமே என்கிற அவதானிப்புவெளிப்படுகிறது.
இவர்களுக்கு தென்னிலங்கையில் இன் றும் மக்களுடைய ஆதரவு உள்ளதா?
வடக்கு கிழக்கில் அனுரகுமாரா தமிழர்களுக்கு நேரடி நல்லெண்ண செயல்களை காட்டாதது விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை ஏமாற் றத்தை ஏற்படுத்தியது. இதனால் அடுத்த தேர்த லில்அவருக்கான வரவேற்பு குறையக்கூடும் என்ற கருத்து வடக்கு கிழக்கிலிருந்து எழுகிறது. எந்த அரசும் நீண்ட காலம்அனைவரையும் திருப்தி செய்ய இயலாது, அதேபோல் என்பிபிக்கும் (NPP) எதிர்ப்பு நிலைகள் விரைவில் தோன்றும்என்று கருதப்படுகிறது. சிவில் நிர்வாக துறையே புதிய ஆட்சிக்கு பெரிய சவாலாக மாறும், ஏனெனில் “system change” அங்கேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் எதிர்ப்புகள் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது.
தமிழ் சமூகத்தின் பார்வையில், கடந்த 76 ஆண்டுகளில் NPP காட்டிய முன்னேற்றம் கணிசமானது. சிங்கள-பௌத்ததேசியவாத அழுத் தங்களுக்கு இடமளிக்காமல், சட்டரீதியான பாது காப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் என் பிபி சில முன்னேற்றங்களைச் செய்துள்ளது. இருந்தாலும், ஒதுக்கப்பட்டநிதிகள் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது; சில உதாரணங்களில், ஒதுக்கப்பட்ட வளங்கள்பயன்படுத்தப்படாமல் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாக விமர்சிக்கப்படுகிறது.
செம்மணி பிரச்சினை போன்ற உணர்ச்சி கரமான விவகாரங்களில், விசாரணை முறையாக நடைபெற வேண்டும் என்றவலியுறுத்தல் தொடர்கிறது.
ஆட்சியின் கவனம் அதில் இருக்கிறது என்பதையும் சிலர் உணர்கிறார்கள். எனினும், வடக்கு கிழக்கு மக்களிடையேஇன்னும் எச் சரிக்கையுடனான நம்பிக்கையற்ற மனநிலை நிலவி வருகிறது. NPP தங்களை முழுமையாக நம்பவைக்கவில்லை; ஆனாலும், அரசுகளுடன் ஒப்பிடும்போது, ஒரு அளவு முன்னேற்றமும் நல் லெண்ணமும்வெளிப்படுகிறது.
இதனால், NPP அரசாங்கத்துக்கு எதிர்ப்பு அலைகள் இயல்பாக உருவாகினாலும், வடக்கு கிழக்கில் அது முந்தையஆட்சிகளைக் காட்டிலும் குறைந்த நம்பிக்கையின்மையுடன், எச்சரிக்கையுட னான ஒரு எதிர்பார்ப்புடன்பார்க்கப்படுகி றது.
செம்மணி பிரச்சினையை தமிழ் தரப்பு இன்னும் சந்தேகத்தோடு பார்க்கிறது. 148 எலும்புக்கூடுகள் தோண்டிஎடுக்கப்பட்டும், கார் பன் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு. இதனால் உண்மையான விசாரணை நடக்குமா அல்லது கண்துடைப்பாகவே முடிவடையுமா என்ற சந்தேகம் உள்ளது.
இந்த ப்ராசஸுக்கு அரசாங்கம் ஒத்துழைக் கிறதா அல்லது தடைகளை ஏற்படுத்துகிறதா என்பதே முக்கியமான கேள்வி. இதுவரை அரசாங்கம் சிங்கள சக்திகளுக்கு இடமளித்து குழப்பம் செய்யவில்லையெனவும், விசாரணை சுதந்திரமாகநடக்கிறது என்ற நேர்மையான பார்வையும் சிலரிடம் உள்ளது. ஆனால், அதிகாரிகள் மட்டத்தில் சில குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. குறிப்பாக, சிஐடி கண்காணிப்பின் காரணமாகவேலை தடைபடுகிறது என சிலர் கூறுகின்றனர். இருந்தாலும், இது முழுமையாக அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்தப்படவில்லை; காவல்துறை அல்லது சிஐடி மட்டத்தில் நிகழும் பிரச்சினைகள் முறையீட்டின் மூலம்சரிசெய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. மொத்தத்தில், சில சந்தேகங் கள் இருந்தாலும், தற்போதைய ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மையான முறையிலே நடை பெறுகின்றன என்பதே மக்களின் பார்வையாகும்.
அனுரகுமார் அரசு தற்போதைய அரசியலமைப்பை திருத்துமா, இல்லை புதிய அரசியலமைப்பு உரு வாக்குமா? இன்றுதேர்தல் நடந்தால், NPP மீண்டும் ஆட்சிக்கு வருமா?
புதிய அரசியலமைப்பு மாற்றம் நடக்கும் என அரசாங்கம் நம்பிக்கை தருகிறது, ஏனெனில் அவர்களிடம் மூன்றில் இரண்டுபெரும்பான்மை உள்ளது. மேலும், அடுத்த தேர்தலிலும் மீண்டும் பெரும்பான்மை பெறும் வாய்ப்பு இருக்கலாம், ஆனால் அதுஉறுதியானதல்ல. காரணம், அரசை மாற்றும் வகையில் தெளிவான மாற்று இன்னமும் இல்லை. அப்படி ஒரு மாற்றுஉருவானால்தான் அரசாங்கம் வீழ்ச்சி அடையும். சிலர் ஒரு வருடத்திற்குள் அரசாங்கம் நீடிக்காது என்கிறார் கள். ஆனால்எனது பார்வையில், இந்த அரசு ஐந்து ஆண்டுகள் முடித்த பின் இன்னொரு அரசு நிச்சய மாக அமையும்; பின்னர் தேவையான அரசியல் மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளது.