அதானி நிறுவனத்தின் ஆரம்ப செலவுகளை மீள செலுத்த இலங்கை தயாராகிறது…

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் கீழ் இந்தியாவின் அதானி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப செலவுகளுக்காக இலங்கை 300 முதல் 500 மில்லியன் ரூபாவை செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலை நிர்ணயம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து இந்தியாவின் அதானி நிறுவனம் அதன் மின்சக்தி திட்டத்தில் இருந்து விலகியது. எனினும் அந்த திட்டத்தை இலங்கையில் செயற்படுத்துவதற்காக ஏற்பட்ட ஆரம்ப செலவுகளை மீண்டும் செலுத்துமாறு அதானி நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இது தொடர்பான கடிதம் கடந்த மே மாதம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. குறித்த நிறுவனம் கோரியத்துக்கு அமைய, பணத்தை மீண்டும் செலுத்த வேண்டுமா? என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சட்ட ஆலோசனை கோரியுள்ளது.

இந்தநிலையில் சில செலவுகளை மீண்டும் செலுத்துவதற்கான சட்ட ஆலோசனை நேற்றைய தினம் (18) பெறப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, சுமார் 300 முதல் 500 கோடி ரூபாய் வரையான தொகையை இலங்கை செலுத்த வேண்டும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் அதானி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய சரியான தொகை தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் 350 மொவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக காற்றாலை மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்கு அதானி நிறுவனம் 442 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்ய தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.