ரணிலின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் -பான்கீ மூன்

104 Views

இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக ஐக்கியநாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை ஜனநாயகத்தையும் பேண்தகு பொருளாதார அபிவிருத்தியையும் அடைவதற்கான சாத்தியம் உள்ளது என கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையில் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply