மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாரான அருட்தந்தை பொலிசாரால் கைது

இன்றைய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் பல தடைகளையும் தாண்டி தாயகத்தில் நடைபெற்றுள்ளது. பொது இடங்களில் சுடரேற்றவும், அஞ்சலி செலுத்தவும் நீதிமன்றத்தின் ஊடாக  தடை விதித்திருந்த போதும், மக்கள் தங்கள் இல்லங்களில் தனிப்பட்ட முறையில் நினைவுகூரலை நிகழ்த்தியிருந்தனர்.

Maveerar Naal 2020 Issue 1 மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாரான அருட்தந்தை பொலிசாரால் கைது

மாவீரர் நினைவு நிகழ்வுகளை மேற்கொள்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரன் அவர்கள்  யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

WhatsApp Image 2020 11 27 at 7.15.04 PM 1 மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாரான அருட்தந்தை பொலிசாரால் கைது

யாழ். ஆயர் இல்லத்திற்கு முன்பாக தீப்பந்தங்களை ஏற்றி மாவீரர்களை நினைவுகூருவதற்கு ஆயத்தமான நிலையில்  அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.