மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது நிர்வாகத்திற்குட்பட்ட, உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய, மட்டக்களப்பு – கோறளைப்பற்று பிரதேச சபைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் குழுவொன்று விஜயம் மேற்கொண்டது.பிரதேச சபையினை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் நிதி வருமானங்களை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பில் இந்த விஜயத்தின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி நிர்வாகத்துக்குட்பட்ட ஏழு உள்ளுராட்சி மன்றங்களில் நடைபெறும் விடயங்களையும் நிர்வகிப்பது தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்களை அதிகரிப்பதனை மேற்பார்வை செய்வதற்காக, மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சரவணபவன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட குழு ஒன்றும் இலங்கை தமிழரசு கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளது.