பாஜக அரசு வெளிநடப்பு செய்தது உலகத் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் – ஸ்ராலின் சீற்றம்

ஜெனிவாவில் இந்தியா வாக்களிக்காமல் தவித்ததை, “தமிழர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்” என திமுக தலைவர் மு.க.ஸ்ராலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் பின்வருமாறு பதிந்துள்ளார்:

“இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக பாஜக அரசு வெளிநடப்பு செய்தது உலகத் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம்!

தமிழ்நாட்டில் தேர்தல் என்பதால்தான் வெளிநடப்பு. இல்லையென்றால் ஆதரவாகவே வாக்களித்திருக்கும்! இதனை தமிழர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.”