சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு நினைவேந்தலை முன்னெடுக்க அனுமதி

சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு நினைவேந்தலை முன்னெடுக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என சட்டத்தரணி சுகாஸ்  தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிமன்றத்திலே நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நகர்த்தல் பத்திரம் மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றிருந்தது.

இதன் போது, சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நினைவேந்தலை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதாக சுகாஸ் தெரிவித்துள்ளார்.