505 Views
கோத்தபயாவை சந்தித்த மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களின் பிரதிநிதிகள், பொருளாதார மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என கூறியுள்ளனர்.
ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிற்கும், மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோத்தபயா தலைமையின் கீழான இலங்கைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவினை வலுப்படுத்த தாம் முயற்சிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.