காங்கேசன்துறையில் உள்ள கடற்படையினருக்கு கொரோனா தொற்று!

காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமில் இருக்கும் இரு கடற்படையினருக்கு  கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது.

விடுப்பில் கண்டி சென்ற இவர்கள், கடந்த 5 ஆம் திகதி காங்கேசன்துறைக்கு வந்துள்ளனர். அங்கு கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பயணம் செய்த பேருந்து மற்றும் புகையிரதத்தில் இவர்களுடன் பயணம் செய்த ஏனையவர்களை அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.