இந்தியாவுடனான பிரச்சினையை பேச்சு மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் – மஹிந்த நம்பிக்கை

இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதால் எந்தவொரு பிரச்னையையும் பரஸ்பர பேச்சுக்கள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய பிரச்னையைக் கூட ஒருவருக்கொருவர் கலந்துரையாடுவதன் மூலம் தீர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனோ அல்லது வேறு எந்த நாட்டினருடனோ இணைந்து கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதில்லை என இலங்கை முடிவு செய்த நிலையில் இதுதொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.