அசுர வேகத்தில் பரவும் கொரோனா தொற்று – நேற்று மட்டும் 44 பேர் பலி

கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் நேற்று மட்டும் 44 பேர் மரணமடைந்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக இலங்கையில் ஒரே நாளில் பலியானவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் பலியானவர்களின் தொகை 1132 ஆக அதிகரித்துள்ளது.