இன்னும் அணையவில்லை
இந்த நெருப்பு
ஆடி எண்பத்து மூன்று…
அவர்கள் மூட்டிய தீ
எமக்குள் இன்னும்
எரிகிறது
சிறுகச் சிறுக சேர்த்துக்
கட்டிய வீடுகள்
கடை தெருக்கள்
கரும்புகைக்குள்
காணாமல் போயின
ஓடி ஓடிச்
சேர்த்தவை யாவும்
அள்ளப்பட்டு
அபகரிக்கப்பட்டன
”ஐயே”..”அக்கே” என்ற
அயல் வீட்டுக்காரன்
”அடோ பற தெமிலோ”
என்றான் சலனமின்றி
தெருக்களெங்கும்
மரணஓலம்..
சந்தியெங்கும்
குருதிச் சகதி
பிறக்காத சிசுவை
தாய் வயிறு
கிழித்துகொன்ற
கொடூரம்
கொதிக்கும் தாரில்
குழந்தையை
வீசிகொன்ற
கோரம்
மகளீர் முலைகொய்து
வன்புணர்ந்து
வதைத்த வன்மம்
தப்பித் பிழைத்தவர்
உடுத்த உடையுடன்
லங்கா ராணியில்
அடைக்கலம் ஆகினர்
வெலிக்கடையிலும்
ஒரு கசாப்புக்கடை
விழிகளைப்
பிடுங்கிவீரம்
காட்டினர்
ஈழத்தின் ஆன்மா
நெருப்பாய் எரிந்தது
இளையோர் மனதில்
எரிமலை வெடித்தது
இன்னும் அணையவில்லை
இந்த நெருப்பு
-சுரேந்திரன்-