பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

புதுவருட தினமான இன்று கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிா்க்குமாறு பொலிஸாா் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வரும் நிலையில், யாழ்.நகா் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள் பூட்டப் பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இன்றைய தினம் காலை நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் மக்கள் வழிபாடுகளை நடாத்த முயற்சித்தனா். எனினும் கோவில் வளாகத்திற்குள் நுழைய நிா்வாகம் தடைவித்திருந்தமையால் வீதிகளில் நின்று மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருந்தனா்.

இதேவேளை யாழ்.நகா் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் முச்சக்கர வண்டிகளில் பொலிஸாா் ஒலிபெரு க்கிகளை பொருத்தி புதுவருடத்தை அமைதியானமுறையில் வீடுகளில் இருந்து கொண்டாடுமாறு கேட்டு வருகின்றனா்.