கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் .

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள், அமைச்சரிடம் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர்.