அத்தியாவசிய தேவைகளுக்கான வெளியில் செல்லும் மக்களை கட்டுப்பதுத்துவதற்கு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களை பயன்படுத்தப் போவதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் திங்கட் கிழமை நாட்களில் வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவோர் இலக்கம் 1அல்லது 2 என்ற இலக்கங்களை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களாக கொண்டுள்ளவர்கள் மட்டுமேயாகும் என அதரிவிக்கப்படுகின்றது.
வாரத்தின் ஏனைய நாட்களில் வீடுகளில் இருந்து வெளியில் செல்பவர்களின் விபரங்கள் வருமாறு:
செவ்வாய்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
புதன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
வியாழன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
வெள்ளி : அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்