Home ஆய்வுகள் ஒருவிரல் புரட்சி – துரைசாமி நடராஜா

ஒருவிரல் புரட்சி – துரைசாமி நடராஜா

புரட்சி ஒருவிரல் புரட்சி - துரைசாமி நடராஜாஇலங்கையின் பாராளுமன்ற தேர்தல் முறையில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசி யலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்நிலையில் புதிய தேர்தல் முறை முன்வைக்கப்படுமிடத்து அது மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பிரதி நிதித்துவத்திற்கு குந்தகம் ஏற்படாத வகையில் அமைய வேண்டுமென புத்திஜீவிகளும் சிவில் அமைப்புக்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனா்.

தேர்தல் என்பது ஒரு நாட்டில் மக்கள் பொதுவாழ்வில் பதவிகளை நிர்வகிப் பதற்காக ஒரு ‘தனிநபரை தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை’ என்னும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையாகும். தேர்தல்கள் என்பது 17 ஆம் நூற்றாண்டு தொடங்கி தற்கால பிரதிநிதித்துவ குடியாட்சி வரை வழக்கமான ஒரு செயற்பாடாக இருந்து வருகின்றன. ஜனநாயகம் உலகில் முக்கியத்துவம் மிக்க ஆட்சிமுறையின் கருதப்படுகின்றது.’

“மக்களுடைய மக்களுக்கான அரசாங்கமே ஜனநாயகம்” என்கிறார் அறிஞர் தோமஸ் கூப்பர். இதேவேளை ‘மக்களுக்காக ஆக்கப்பட்ட, மக்களினால் ஆக்கப்பட்ட, மக்களுக்கு பதில் சொல்லக்கூடிய, மக்கள் அரசு’ என்று ஜனநாயகத்தை வெப்ஸ்டர் வரைவிலக்கணம் செய்கின்றார். அறிஞர்களான தியாடோ பார்க்கர், லிங்கன் உள்ளிட்ட பலரும் ஜனநாயகம் குறித்த தமது வரைவிலக்கணங்களை முன் வைத்துள்ளனர். இந்த வகையில் ஒரு நாட்டில் ஜனநாயகம் சிறப்பிடம் பெறுவதற்கு தேர்தல்கள் உந்துசக்தியாக விளங்குகின்றன.

மனித சமுதாயம் கடந்துவந்த அரசியல் அமைப்புக்களில் ஆகச்சிறந்தது ஜனநாயகமாகும்.உலகின் பல நாடுகளும், உலக மக்களும் ஜனநாயக ஆட்சியையே விரும்புகின்றனர். இந்த ஜனநாயக நாடுகளின் தலையெழுத்தை தீர்மானிப்பது தேர்தலாகும். ஒரு நாட்டில் ஜனநாயகம் சிறப்பாக செயற்பட வேண்டு மெனில் அதில் தேர்தல்களுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. ஒரு ஜனநாயக சமூகம் என்பது தேர்தல் மூலமே வரையறுக்கப்படுவது என்ற ஆழமான ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகின்றது.

தேர்தலின் மூலமாக தாம் விரும்பிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அல்லது அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகின்றது. ஒரு நாட் டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குப் பின்னர் ஆட்சியாளர்களும், அரசாங்கமும் மாற்றியமைக் கப்படுவது ஜனநாயக வழக்கமாகும். இதற் காகவே தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல்கள் மிகமிக அவசியமாகும். தேர்தல்கள் மூலம் சர்வாதிகாரம், குடும்ப ஆட்சி, ஊழல் நிறைந்த ஆட்சி என்பவற்றுக்கு முற்றுப்புள்ளிவைத்து புதிய அரசாங்கத்தை உருவாக்கும் நிலைமை ஏற்படலாம். இந்த வகையில் ‘ஒரு விரல் புரட்சி’ நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படவும் அடிப்படையாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.

அற்ப சலுகைகள் வேண்டாம்

சிவில் உரிமைகள், அரசியல் உரிமைகள், பொருளாதார உரிமைகள் என்று உரிமைகளை வகைப்படுத்துவார்கள். இவற்றுள் வாக்களிக்கும் உரிமை, தேர்தல்களில் போட்டியிடும் உரிமை, பதவியேற்கும் உரிமை, மனுச்செய்யும் உரிமை என்பன அரசியல் உரிமையின் பாற்படும்.இத்தகைய அரசியல் உரிமைகளுள் வாக்களிக்கும் உரிமை என்பது மிகவும் இன்றியமையாததாகும். இவ்வாக்குரிமையை வாக்காளர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரமாக வும், சுயாதீனமாகவும் வாக்காளர்கள் வாக்க ளிக்க வேண்டும். அற்ப சலுகைகளுக்காக வாக்குரிமையை யாரும் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிக் கும் தேர்தல்கள் நம்பகத்தன்மையுடன் இடம் பெறுதல் வேண்டும். இதுவே பலரினதும் எதிர் பார்ப்பாகும்.

மக்கள் தமது பிரதிநிதிகளை அல்லது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறை அல்லது தேர்தல் முறையே பிரதிநி தித்துவ முறை எனப்படுகின்றது. கோட்பாட்டு அடிப்படையில் இன்றுவரை மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளாக மூன்று வகையான பிரதிநிதித்துவ முறைகள் காணப்படுவதாக புத்திஜீவிகள் வலியுறுத்துகின்றனர். இனவாரிப் பிரதிநித்துவ முறை அல்லது சமூகவாரி பிரதிநித்துவ முறை, பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறை அல்லது தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறை, விகிதாசார பிரதிநிதித்துவ முறை என்பன அவை மூன்றுமாகும்.

இனரீதியில் அல்லது சமூக ரீதியில் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வழிமுறை இனவாரிப் பிரதிநிதித்துவ முறையாகும். இலங்கையில் பாராளுமன்ற ஆட்சிமுறை அறிமுகம் செய்யப்பட்ட காலப் பகுதியில் அதாவது 1833 ம் ஆண்டு கோல்புறூக் யாப்பின் கீழ் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் வழிமுறைகளாக இனவாரி பிரதிநிதித்துவ முறையே பின்பற்றப்பட்டமை தெரிந்ததேயாகும். 1928 ம் ஆண்டில் தமது விதந்துரைகளை முன்வைத்த டொனமூர் ஆணைக் குழுவினர் இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழிக்குமாறு குறிப்பிட்டிருந்தனர். மேலும் ‘இனவாரிப் பிரதிநிதித்துவம் இனவேறுபாடுகளை குறைப்பதற்கு பதிலாக அவற்றை அதிகரிக்கச் செய்துள்ளதோடு, எப்போதும் தீவிரமானதாக விளங்கும் சாதி வேறுபாடுகளைப் பொறுத்து, அதன் உணர்ச்சிவசப்பட வைக்கும் வேண்டு கோள்கள் கடந்த காலங்களில் மிகவும் சிறிதளவுதான் குறைந்துள்ளது’ என்றும் தெரிவித் திருந்தனர்.

விகிதாசார தேர்தல் முறை

இலங்கையில் 1931 ம் ஆண்டு டொனமூர் யாப்பின் கீழ் பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1978 ம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்புவரை நடைமுறையில் இருந்தது. இன ஒற்றுமையைத் தூண்டி தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துதல், நிர்வாக ஓட்டத்தை துரிதப்படுத்தி தேசிய அபிவிருத்தியை துரிதப்படுத்துதல், பிரதிநிதிகள் கண்காணிக்க வேண்டிய தேர்தல் தொகுதிகள் சிறியதாக இருப்பதால் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றக்கூடிய நிலை ஏற்படல், பிரதிநிதித்துவத்தில் வெற்றிடம் ஏற்படுகையில் இடைத்தேர்தல்கள் இடம்பெறும் நிலையில் இதனால் ஜனநாயகம் சிறப்படையும் என்று பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறைக்கு சார்பாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும் பெரும்பான்மை வாக்காளர் விரும்பாத ஒருவரை உறுப்பினராக தெரிவு செய்யக்கூடிய நிலை பிரதேசவாரி பிரதி நிதித்துவத்தில் காணப்பட்டதோடு நாடு தழுவிய ரீதியில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்திற்கும், பாராளுமன்றத்தில் அவை பெறும் ஆசனங்களுக்கும் இடையில் முரண்பாட்டுத்தன்மை காணப்பட்டது. இத்தகைய பல குறைபாடுகளும் 1977 இல் 5/6 பெரும் பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உள்நோக்கங்களுமே விகிதாசார தேர்தல் முறை 1978 ம் ஆண்டு யாப்பின் ஊடாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக அரசியற்றுறை விரிவுரையாளர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

விகிதாசார தேர்தல் முறை எனப்படுவது, ‘ஒரு தேர்தல் மாவட்டத்தில் அல்லது பல்லங்கத்துவ தேர்தல் தொகுதியில் ஒரு கட்சியோ அல்லது குழுவோ பெற்ற வாக்கு விகிதாசாரத்திற்கேற்ப ஆசனங்களை பகிர்ந்தளிக்கின்ற கணிதரீதியான ஒரு தேர்தல் முறையாகும்.’ தேர்தல் தொகுதியொன்றில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும், குழுவும் மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் செல்வாக் கிற்கேற்ப அவற்றிற்குரிய ஆசனங்களை அல்லது பிரதிநிதித்துவத்தினைப் பங்கிட்டு வழங்கும் தேர்தல் முறையே விகிதாசார தேர்தல் முறை என்றும் கூறப்படுகின்றது. இங்கிலாந்தின் தோமஸ் குரே என்பவரால் விகிதாசார பிரதிநிதித்துவ முறை முதலில் அறிமுகம் செய்யப் பட்டது.

பெரும்பான்மை வாக்காளர்கள் விரும்பு கின்ற கட்சியைச் சேர்ந்தவரே, உறுப்பினராக வரக்கூடிய நிலையும் கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் விகிதாசாரத்திற்கேற்ப உறுப்பினர்களை தெரிவு செய்யக்கூடிய நிலையும் காணப்படுவதால் கூடுதலான ஜனநாயகத்தன்மை மிக்க தேர்தல் முறையாக விகிதாசார தேர்தல் முறைமை காணப்படுகின்றது. நாட்டின் சகல விதமான அரசியல் அபிப்பிராயங்களும் ஆட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் பெறுவதை இயலச் செய்வதாக அமைந்திருத்தல். பலமான எதிர்க்கட்சி ஒன்றினை உருவாக்குதல் போன்ற பல விடயங்கள் விகிதாசார தேர்தல் முறைக்கு சார்பாக முன்வைக்கப்படுகின்றன. மேலும் இத்தேர்தல் முறை நாட்டின் அபிவிருத்திக்கும், ஐக்கியத்துக்கும் வலுசேர்க்கும் என்றெல் லாம் தெரிவிக்கப்பட்டபோதும் எதிர்பார்ப்புக்கள் பலவற்றையும் சிதைத்த ஒரு தேர்தல் முறை யாகவே இத்தேர்தல்முறை விளங்குகின்றது.

புதிய தேர்தல் முறை

வாக்காளர்களால் இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத தேர்தல் முறை. கணித ரீதியில் அமைந்த தேர்தல் முறை. தேர்தல் செலவுகள் அதிகம். பிரதிநிதிகளின் கண்காணிப்பு எல்லை அதிகம். பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடையில் குறைந்த தொடர்பு. பல்லங்கத்துவ தேர்தல் தொகுதி முறை பின்பற்றப்படுவதால் தமது உண்மையான பிரதிநிதி யாரென மக்கள் அடையாளம் காண இயலாத நிலை தோன்றும் என்றெல்லாம் இத்தேர்தல் முறைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.மொத்தத்தில் அபிவிருத்திக்கு பதிலாக வீழ்ச்சிக் கும், ஐக்கியத்துக்கு பதிலாக விரிசலுக் கும் விகிதாசார தேர்தல் முறை வித்திட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு புதிய தேர்தல் முறையை முன்வைக்கும் முன்னெடுப்புக்கள் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின் றன. எனினும் இது சாத்தியப்படாத நிலை யில் இப்போது பாராளுமன்ற தேர்தல் முறை
மையில் திருத்தத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் மீண்டும் களமிறங் கியுள்ளது. இத்தேர்தல் முறைமையின் அடிப்படையில் 225 உறுப்பினர்களில் 160 பேர் நேரடியாக வாக்காளர்கள் மூலமாக தெரிவு செய்யப் படுவார்கள் என்றும் மீதமுள்ள 65 பேர் விகிதாசார அடிப்படையில் தேசிய அல்லது மாகாண அல்லது மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் ஆலோசனையை தொடர்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக பிரதமர் தலைமையில் அமைச்சரவை உப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்து செயற்படுதல்

இதேவேளை விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநி தித்துவ அதிகரிப்பிற்கு வலு சேர்த்தது. பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களில் மலையக பிரதிநிதிகள் ஆதிக் கம் செலுத்தினர். இதனூடாக பல்வேறு அபிவிருத்திகள் இம்மக்களை வந்தடையும் வாய்ப்பும் உருவானது. மலையக மக்களை பொறுத்தவரையில் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு தொழில்வாய்ப்பு, பாடசாலை வளமேம்பாடு போன்ற பல அபிவிருத்திகளும் இதில் உள்ளடங்கும்.

பிரதேசவாரி பிரதி நிதித்துவம் பெரிதும் பாதிப்புகளுக்கே வித்திட்டது. இந்நிலையில் இம்மக்களின் பிரதி நிதித்துவத்தை மழுங்கடித்து அவர்களின் அபிவிருத்திகளை பாழ்படுத்த புதிய தேர்தல் முறை காரணமாக இருந்துவிடக்கூடாது. இந்நிலையில் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் எழுச்சிக்காக புதிய தேர்தல் முறையை சாதகமாக்கிக் கொள்ள புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்படுதல் வேண்டும் என்பதே உண்மையாகும்.

Exit mobile version