Home செய்திகள் மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபன கிளையின் முன் மக்கள் கூடியதால் பதற்றம்

மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபன கிளையின் முன் மக்கள் கூடியதால் பதற்றம்

மக்கள் கூடியதால் பதற்றம்

மக்கள் கூடியதால் பதற்றம்

மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபன கிளையினை இன்று பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்த வேளையில் அதனை காவல்துறையினர்  தடுத்த நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு நெருக்கடிளை மக்கள்  எதிர்நோக்கி வருகின்றனர்.

எரிபொருட்கள் வழங்கப்படுகின்ற போதிலும் போதியளவு எரிபொருட்கள் வழங்கப்படாத காரணத்தினால் தினமும் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் எரிபொருட்கள் வரும் வரையில் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இன்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருட்கள் வழங்கப்படாது என்று வெளியான தகவல்களையடுத்து பெருமளவானோர்  மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினை முற்றுகையிட முற்பட்டனர்.

இது தொடர்பில் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் நிலைமையினை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துடன் அங்கிருந்தவர்களை கலைந்துசெல்லுமாறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

இதேநேரம் இன்றைய தினமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

Exit mobile version