Tamil News
Home செய்திகள் தமிழகத்திற்கு கடல்வழியாக தப்பித்துச் செல்ல முயன்ற ஐவர் கைது

தமிழகத்திற்கு கடல்வழியாக தப்பித்துச் செல்ல முயன்ற ஐவர் கைது

தமிழகத்திற்கு செல்ல முற்பட்ட ஐவர் கைது

இலங்கையில் இருந்து மன்னார் கடல் வழியாக தமிழகத்திற்கு தப்பித்து செல்ல முற்பட்ட ஐவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழமுடியாது வடக்கு, கிழக்கு பகிதிகளில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

அந்தவகையில் நேற்றைய தினம் இரவு படகு மூலம் கடல்வழியாக தமிழகத்திற்கு தப்பிச் செல்ல முற்பட்ட போது மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை மற்றும் பெண் ஒருவர் உட்பட ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Exit mobile version