Tamil News
Home செய்திகள் இன்னும் ஒரு மாதத்தில் சிறப்பு சலுகைகளுடன் நாடு திரும்பவுள்ள கோட்டாபய

இன்னும் ஒரு மாதத்தில் சிறப்பு சலுகைகளுடன் நாடு திரும்பவுள்ள கோட்டாபய

மக்கள் எதிர்ப்பால் நாட்டை விட்டு வெளியேறி, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளைப் பெற உள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அது, அவருக்கும், அவரது மனைவிக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஒரு மாதத்தில் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version