Tamil News
Home செய்திகள் ஜீ.எஸ்.பி சலுகையை பெற்றுக்கொள்ள சர்வதேசத்துடன் தொடர்ந்து பேச்சு-அமைச்சர் பந்துல குணவர்தன

ஜீ.எஸ்.பி சலுகையை பெற்றுக்கொள்ள சர்வதேசத்துடன் தொடர்ந்து பேச்சு-அமைச்சர் பந்துல குணவர்தன

ஜீ.எஸ்.பி சலுகையை இலங்கைக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் சர்வதேசத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை இடம்பெற்று வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்காக மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மேம்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே அந்த நிவாரணம் நாட்டுக்கு கிடைக்கும் என தாம் நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

“கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் ஆலோசிக்கப்படுகிறது இது தொடர்பில் ஜப்பானும் கலந்துரையாடியுள்ளது. எனினும் ஒரு உறுதியான முடிவுக்கு வர சிறிது காலம் பிடிக்கும். கடன் மறுசீரமைப்பு என்பது அத்தியாவசியமான விடயம் என்பதால் அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்“ என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Exit mobile version