Tamil News
Home செய்திகள் இலங்கை கடற்பரப்புக்குள்  அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள்  அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள்  அத்துமீறிய முறையில்  மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை சட்டவிரோதமாக படகொன்றில்  நுழைந்து 7 தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே, அப்பகுதியில் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Exit mobile version