Tamil News
Home செய்திகள் இலங்கை மாணவர்களுக்காக பாடசாலை சீருடைகளை நன்கொடையாக வழங்கியது சீனா

இலங்கை மாணவர்களுக்காக பாடசாலை சீருடைகளை நன்கொடையாக வழங்கியது சீனா

இலங்கை மாணவர்களுக்காக ரூ.5 பில்லியன் பெறுமதியான பாடசாலை சீருடைகளை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் திங்கட்கிழமை (19) தெரிவித்துள்ளது.

சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவினால் பரிசளிக்கப்படும் பாடசாலை சீருடைப் பொருட்கள், 2023ஆம் ஆண்டில் இலங்கையின் 70% சீருடைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எனத் தெரிவித்துள்ளது.

20 கொள்கலன்களில் 38,000 பெட்டிகளில் 3 மில்லியன் மீற்றர் நிறைவுப் பொருட்களைக் கொண்ட முதல் தொகுதி சீனாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ருடைப் பொருட்களுக்கான சீனாவின் உதவியின் 1வது தொகுதி பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது;

ஷேர்ட்/கவுன் – வெள்ளை, 2,374,427.5 மீற்றர்
கால்சட்டை-வெள்ளை, 350,031.5 மீற்றர்
கால்சட்டை-நீலம், 150,003.5 மீற்றர்
ரோப்-ஆரஞ்சு, 138,134 மீற்றர்

Exit mobile version