Tamil News
Home செய்திகள் மக்கள் மீது கவனத்தை திருப்பிய சுமந்திரன்

மக்கள் மீது கவனத்தை திருப்பிய சுமந்திரன்

அரசியல்வாதிகளுக்கு தோல்வியேற்படும் போது தான் மக்கள் மீதான கரிசனைகள்; அவர்களுக்கு வருவதுண்டு. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரனும் விதிவிலக்கில்லை.

அண்மையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு சந்தித்த தோல்வியை தொடர்ந்து மக்களின் தேவைகள் தொடர்பில் அதன் கவனம் திரும்பியுள்ளது. யாழ் மாநகரசபையில் உள்ள வசந்தபுரம் கிராமத்தில் உள்ள 86 குடும்பங்களுக்கு 10 கழிவறைகளை கட்டிக்கொடுக்கும் பணியை சுமந்திரன் மேற்கொண்டு வருகின்றார். தற்போது அங்கு இரண்டு கழிப்பறைகளே உள்ளன.

இதற்கான செலவான ஒரு மில்லியன் ரூபாய்களை சமூகவலைத்தளங்களின் ஊடாக அவர் சேகரித்து வருகின்றார். இதனிடையே> புலம்பெயர் சமூகத்திடம் இருந்து தேர்தல் நேரத்தில் வாங்கிய பல மில்லியன் ரூபாய்களுக்கு என்ன நடந்தது என சமூகவலைத்தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version