Tamil News
Home செய்திகள் பலஸ்தீன யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு வழியுறுத்தி கையெழுத்து சேகரிப்பு

பலஸ்தீன யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு வழியுறுத்தி கையெழுத்து சேகரிப்பு

சர்வதேச பலஸ்தீன ஒத்துழைப்பு தினத்தை முன்னிட்டு பலஸ்தீன யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு வழியுறுத்தி கையெழுத்து சேகரிப்பும், துண்டுப்பிரசுரம் விநியோகமும் மூதூர் பிரதான வீதியில் நேற்று (10) இடம்பெற்றது.

சோசலிஸ இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்நிகழ்வு இடம்பெற்றது.இதில் மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் இணைந்து இவ் கையெழுத்து, துண்டுபிர விநியோகத்தில் ஈடுபட்டனர்.

சோசலிஸ இளைஞர் சங்கத்தினால் இன்று 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் கையெழுத்து போராட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.இவ்வாறு பலஸ்தீன யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென பெறப்பட்ட கையெழுத்துக்கள் ஐ.நா சபைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version