Tamil News
Home செய்திகள் சீனாவின் உயர் மட்டக்குழு சிறீலங்காவை வந்தடைந்துள்ளது

சீனாவின் உயர் மட்டக்குழு சிறீலங்காவை வந்தடைந்துள்ளது

சிறீலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் தொடர்ச்சியாக சீனாவின் 17 பேர் அடங்கிய உயர்மட்ட குழுவினர் மூன்று நாள் பயணமாக நேற்று (17) சிறீலங்காவுக்கு வருகைதந்துள்ளனர்.

இந்த குழுவில் சீனா அரசின் அமைச்சர்கள், அரச செயலாளர்கள், நாடாளுமன்றக் உறுப்பினர்கள், பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினர்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை சிறீலங்காவுக்கான சீனா தூதுவர் மற்றும் அமைச்சர் அர்சுணா ரணதுங்கா ஆகியோர் வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் நிதி உதவியில் கொழும்பில் அமைக்கப்பட்ட தென்னாசியாவின் மிக உயரமான கோபுரத்தின் திறப்புவிழாவைத் தொடர்ந்து சீனா அதிகாரிகளின் வருகை அமைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version