Tamil News
Home செய்திகள் சவேந்திர சில்வா நியமனம் – அமெரிக்கா ஆழ்ந்த கவலை

சவேந்திர சில்வா நியமனம் – அமெரிக்கா ஆழ்ந்த கவலை

சிறிலங்கா இராணுவத் தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப் பட்டுள்ளது குறித்து, ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவையாகும்.இந்த நியமனம் சிறிலங்காவின் அனைத்துலக நற்பெயர் மற்றும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமானது” என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version