Tamil News
Home செய்திகள் பளை மருத்துவமனை பொறுப்பதிகாரி சிறிலங்கா இராணுவத்தினரால் கைது

பளை மருத்துவமனை பொறுப்பதிகாரி சிறிலங்கா இராணுவத்தினரால் கைது

கிளிநொச்சி-பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சி.சிவரூபன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே சிறிலங்கா இராணுவத்தினர் இவரை இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபன், பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மருத்துவர் சின்னையா சிவரூபன் (வயது – 41) சாவகச் சேரியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version