Tamil News
Home செய்திகள் எங்கேயும் நான் தப்பிச்செல்ல முயலப்போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

எங்கேயும் நான் தப்பிச்செல்ல முயலப்போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

தாம் தென்கொரியாவில் வசிக்க செல்வதாக வெளியான செய்திகள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாடுகளுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை தமக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தாம் வன்மையாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருப்பதால், கம்பஹா மாநகர சபையில் உலக தொழிலாளர் தினத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version