Home செய்திகள் ஈழத் தமிழர்கள், முஸ்லிம்கள், தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு

ஈழத் தமிழர்கள், முஸ்லிம்கள், தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு

ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு, முஸ்லிம் பெண்களின் ஆடை கட்டுப்பாட்டு விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை ஆகியவை குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இந்திய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று (13.09) நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

கொழும்பு சென்றுள்ள ஜவாஹிருல்லா, இலங்கையின் சிறுபான்மையின முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளைப் பற்றி அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடினார்.

javahiru ஈழத் தமிழர்கள், முஸ்லிம்கள், தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனுஇதேபோல் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும் மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவினை பிரதமரிடம் நேரில் கையளித்தார்.

Exit mobile version