Tamil News
Home செய்திகள் இலங்கையில் சிறைக் கைதிகள் 260 பேருக்கு கொரோனாத் தொற்று

இலங்கையில் சிறைக் கைதிகள் 260 பேருக்கு கொரோனாத் தொற்று

இலங்கையில் சிறைக் கைதிகள் 260 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளுக்கு அழைத்துவரப்படும் புதிய கைதிகள் அனைவரும் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் படுகின்றன.

அதன்பின்னர், தொற்றாளர்களாக அடையாளம் காணப்படும் கைதிகள் சிகிச்சைகளுக்காக கந்தகாடு சிகிச்சை மையத்துக்கு அனுப்பிவைக்கப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளியாட்கள், சிறைக் கைதிகளைப் பார்வையிடுவதற்காக விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version