Tamil News
Home செய்திகள் இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு

இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு

இலங்கையில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான விசாகளுக்கான கால எல்லை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு குடியகல்வு திணைக்கள ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 2020 மார்ச் மாதம் 14 ஆம் திகதி முதல் 30 தினங்களுக்கு அனைத்து வகையான விசாக்களில் கால எல்லையும் நீடிக்கபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாட்டினுள் பரவிவரும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version