அமெரிக்க அரசு ஒவ்வொரு கால் ஆண்டும் வெளியிட்டுவரும் குடிவரவு மற்றும் குடியகல்வு பதிவுகளில் சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்கா அதிபர் இரட்டைக் குடியுரிமையை கொண்டுள்ளது அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அவர் முன்னர் தனது குடியுரிமையை இழந்துள்ளதாக தெரிவித்தபோதும், பட்டியலில் அவரது பெயர் இல்லாதது விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது சிறீலங்காவுடன் நல்லுறவை ஏற்படுத்த அமெரிக்க முனைந்துவரும் நிலையில் இந்த பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த அறிவித்தல் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கோத்தபாயாவுக்கு வலுச் சேர்க்கலாம் என கருதப்படுகின்றது.