Tamil News
Home செய்திகள் திருகோணமலை நகர் மீது அந்திய நாடுகள் கண்வைப்பதற்கு வளங்களே காரணம் – தேசிய மக்கள்...

திருகோணமலை நகர் மீது அந்திய நாடுகள் கண்வைப்பதற்கு வளங்களே காரணம் – தேசிய மக்கள் சக்தி

திருகோணமலை நகர் முக்கிய வளங்களை கொண்டு காணப்படுவதால் பல நாடுகள் கண் வைத்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச் சந்திரா தெரிவித்தார்.

திருகோணமலையில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் இந்தியா, சீனா ,அமெரிக்கா எந்த நாடாக இருந்தாலும் திருகோணமலை மீது கண் வைத்துள்ளது. தேசிய சொத்துக்கள் விற்பனை செய்து கொள்வது தொடர்பில் அரசாங்கத்தின் அசமந்த போக்கும் காரணமாக உள்ளது. சம்பூர், மற்றும் பெற்றோலிய வளம், துறைமுக, சுற்றுலாத் துறை போன்றன இதற்குள் அடங்குகின்றன.

இந்த காணிகள் விற்பனை செய்யப்படுகிறது மக்கள் நலனுக்காக இன்றி அரசாங்கத்தின்தேவைக்காக இதனை செய்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி ஆட்சி காலத்தில் இது போன்ற விடயங்கள் நிறுத்தப்பட்டு மக்கள் ஆட்சி மலரும் .

இந்தியாவின் ஆதிக்கம் தற்போது இங்கு வருகின்றமை தொடர்பில் மக்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாடு பாரிய கடனை பெற்று அதனை செலுத்த முடியாது இது போன்ற தேசிய சொத்துக்களை விற்பனை செய்து கடனை அடைக்க பார்க்கின்றனர். இதனை நடை முறைப்படுத்த அதற்கேற்ற ஆளுனரை நியமித்துள்ளார்.

முதலீட்டாளர்களுடன் சேர்ந்து பயணித்தாலும் மக்கள் நலனில் அக்கரை செலுத்த வேண்டும். ஜனாதிபதிக்கு இருப்பது இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களே புதிய தேர்தல் வர இருக்கிறது. புதிய இரு ஆளுனர்களின் நியமனத்தால் மக்கள் மீது சுமைதான் உளளது. வடமேல் மாகாணத்தில் ஹாபிஸ் நசீர்,தென் மாகாணத்தில் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்கள் முன்னால் சுற்றாடல் அமைச்சர் முன்னால் முதலமைச்சர் குற்றம் சாட்டப்பட்டவர்தான் இவர் கடந்த காலங்களில் தேவையற்ற விடயங்களுக்கு மண் அகழ்வுக்காக அனுமதி கொடுத்தவர்.

மூதூர் சாபி நகர் பகுதியில் மண் அகழ்வுக்காக தேவையற்ற விதத்தில் அனுமதி கொடுத்தவர் இவரை ஏற்றுக் கொள்ள முடியாது நீதிமன்றில் பாராளுமன்ற பதவி பறிக்கப்பட்டு முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டவர் இவர் போன்றவர்களுக்கு ஆளுனர் பதவி வழங்குவது பொருத்தமற்றது எனவும் தெரிவித்தார்.

Exit mobile version