Tamil News
Home செய்திகள் ரணிலும் பசிலும் பேசியது என்ன? ராஜபக்ஷக்களின் எதிா்ப்புக்கு மத்தியில் ஐந்தாவது சந்திப்பு

ரணிலும் பசிலும் பேசியது என்ன? ராஜபக்ஷக்களின் எதிா்ப்புக்கு மத்தியில் ஐந்தாவது சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் இருவருக்கும் இடையில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இருவருக்கும் இடையில் ஐந்தாவது தடவையாக இந்தச் சந்திப்புஇடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணிலுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் சமீப ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்திற்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பலமுறை முன்வைத்துள்ள போதும் ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை.

அரசியலமைப்பின்படி ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தும் சூழலே உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்க வேண்டும்.அதன்பின்னர் பாராளுமன்றத் தேர்தல் ஊடாக அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Exit mobile version