Tamil News
Home செய்திகள் அன்னை பூபதி நினைவிடத்தில் நினைவு வணக்கம்

அன்னை பூபதி நினைவிடத்தில் நினைவு வணக்கம்

இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிரான அமைதிவழிப்போரில் உயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 32 வது நினைவு தினம் இன்று உணர்வு பூர்வமாக நினைவு கொள்ளப்பட்டது.மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக செயலாளர் இருதயம் செல்வகுமார் உட்பட கட்சி இளைஞரணி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

1988.03.19 ஆம் திகதியிருந்து 1988.04.19 வரையில் உண்ணா விரதமிருந்து அன்னை பூபதி உயிர்நீர்த்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version