Tamil News
Home செய்திகள் மின்னல் தாக்கி சிறுமி பரிதாபமாக பலி.

மின்னல் தாக்கி சிறுமி பரிதாபமாக பலி.

பதுளை – ஹல்தமுல்ல பகுதியில் மின்னல் தாக்குதலில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹல்தமுல்ல பகுதியில் தோட்டம் ஒன்றில் உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்த சிறுமி மீதே மின்னல் தாக்கியுள்ளது.

உயிரிழந்த சிறுமி 10 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதால் பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இதை கவனத்திற்கொண்டு அனைவரும் பாதுகாப்பாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Exit mobile version