Tamil News
Home செய்திகள் எமது தரப்பில் ஜனாதிபதி வேட்பாளா் ஒருவரை நிறுத்துவோம் – மகிந்த

எமது தரப்பில் ஜனாதிபதி வேட்பாளா் ஒருவரை நிறுத்துவோம் – மகிந்த

ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்பின் சார்பில் சிறந்த வேட்பாளரை களமிறக்குவோம். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலமுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கேள்விகளும் மகிந்த அளித்த பதில்களும் அப்படியே வருமாறு,

கேள்வி – உங்களின் தாய் கட்சியான சிறீலங்கா சுதந்திர கட்சியில் பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளன. உங்களின் அரசியல் அந்த கட்சியின் இருந்து ஆரம்பமானது. ஆகவே, கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் – சிறீலங்கா சுதந்திரக கட்சியில் பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளன. பிரச்னைகளுக்கு பேச்சுகள் ஊடாக வெகுவிரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

கேள்வி – உங்களின் பங்காளிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார்களே… அது உங்களுக்கு சவாலாக அமையாதா?

பதில் – சவால் ஏதுமில்லை. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டணிகள் ஸ்தாபிக்கப்படுவது இயல்பானதே.

கேள்வி – ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாரே?

பதில் – அது அவரின் நிலைப்பாடு. நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம். கட்சியின் நிறைவேற்று சபை ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுப்போம்.

கேள்வி – பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப் போகின்றீர்களா?

பதில் – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் உள்ளது.

Exit mobile version