Tamil News
Home செய்திகள் மேலிட உத்தரவுக்கு அமையவே மாணவர்களை விசாரித்தோம் – தெல்லிப்பழை பொலிஸார்

மேலிட உத்தரவுக்கு அமையவே மாணவர்களை விசாரித்தோம் – தெல்லிப்பழை பொலிஸார்

பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தோம் என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அண்மையில் நடத்தப் பட்ட இல்ல மெய்வன்மை போட்டியில், கார்த்திகை பூ வடிவில் அலங்காரம் செய்யப்பட்டமை தொடர்பில், மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்த மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸாரின் வாக்கு மூலத்தை பெறுவதற்காக, தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய பணிமனையில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டது.

இதற்கிணங்க, யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையான பொலிஸ் உத்தியோகத்தர், பொறுப்பதிகாரி விடுமுறையில் இருக்கிறார் என்று கூறி சம்பவம் தொடர்பில் வாக்கு மூலத்தை வழங்கியுள்ளார். அந்த வாக்குமூலத்தில், தமக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரமே மாணவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version