மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 34 வருடங்களாக ஒரு சுயாதீனமான பிரதேச செயலகமாக இயங்கி வருகின்றது. ஆனால் இங்கு ஒரு தனியான பிரதேச செயலாளர் என்று ஒருவர் இல்லை. இது இலங்கையின் ஆச்சரியங்களில் ஒன்று. கணக்காளர் என்ற ஒருவர் இல்லை. கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஏதேச்சையான அதிகாரத்தினுள் சட்டவிரோத உத்தரவிற்கு கட்டுப்பட்டு தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் செயற்பட்டு கொண்டு இருக்கின்றது. இது அரச ஏதேச்சை அதிகாரமாகும்.
தமிழர் தாயகத்தில் இருந்து கல்முனை வடக்கு பறி போக போகின்றது. இது தான் அவர்களது சூழ்ச்சி. இது தான் அவர்களது நிகழ்ச்சி நிரல். இந்த சதிக்கு எதிராகத் தான் இந்த மக்கள் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். 14 நாட்களாக இந்த மக்கள் போராடி வருகின்றார்கள். இவர்களுக்கு இந்த நீதி கிடைக்கும் வரை மக்களோடு சேர்ந்து நாமும் போராடுவோம். இது வெறுமனே கல்மனை வடக்கின் பிரச்சினை மாத்திரம் அல்ல. தமிழ் தேசத்தின் பிரச்சினை. கல்முனை வடக்கிற்கு நீதி கேட்டு தமிழ் தேசம் திரள வேண்டும்.”
இவ்வாறு சுகாஷ் தெரிவித்தாா்.