Home செய்திகள் வவுனியா நகரப்பகுதி இராணுவம் ,காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை

வவுனியா நகரப்பகுதி இராணுவம் ,காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை

வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், சுகாதாரப் பிரிவினர் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகரின் பசார் வீதி, மில் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை உள்வட்ட வீதி என்பன இராணுவம் மற்றும் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு குறித்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டது. மேலும் நான்கு பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

IMG 20210701 WA0025 வவுனியா நகரப்பகுதி இராணுவம் ,காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை

பசார் வீதி சந்தி, தர்மலிங்கம் வீதி சந்தி, சந்தை உள்வட்ட வீதி சந்தி, மில் வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி என்பவற்றில் வைத்து சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது வர்த்தக நிலையங்களில் பணியாற்றியோர், நகருக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்தோர், வாகனச் சாரதிகள் என சுமார் 400 இற்கு மேற்பட்டவர்களுக்கு இதன்போது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், பி.சி.ஆர் எடுத்த பின்பே மக்கள் நகரில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136

Exit mobile version