Tamil News
Home செய்திகள் உக்ரேன் – IMF இடையே கடன் தொடர்பில் இணக்கப்பாடு

உக்ரேன் – IMF இடையே கடன் தொடர்பில் இணக்கப்பாடு

உக்­ரே­னுக்கும் சர்­வ­தேச நாணய நிதி­யத்­துக்கும் (IMF) இடையில் அதி­கா­ரிகள் மட்­டத்­தி­லான இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தாக ஐஎம்எவ் தெரி­வித்­துள்­ளது.

முழு­மை­யான கட­னுக்­கான பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பிப்­ப­தற்கு இந்த இணக்­கப்­பாடு வழி­வ­குத்­துள்­ளது.

உக்­ரைனின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இணை­வ­தற்­கான உக்­ரேனின் முயற்­சிக்கும் இந்த கடன்­திட்டம் உதவும்  என IMF தெரி­வித்­துள்­ளது.

IMF மூலம் 20 பில்­லியன் டொலர்­களை உக்ரேன் எதிர்­பார்க்­கி­றது.

கடந்த 13 முதல் 17 ஆம் திகதி வரை போலந்தின் வோர்ஸோ நகரில் கெவின் கிறே தலை­மை­யி­லான IMF அதி­கா­ரிகள் குழு­வி­னரும் உக்­ரே­னிய அதி­கா­ரி­களும் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டனர் அதன்பின் IMF வெளி­யிட்ட அறிக்­கையில் இந்த இணக்­கப்­பாடு குறித்து தெரி­விக்­கப்­பட்­­டுள்­ளது.

சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் இணைந்த 4 மாத­கால செயற்­திட்­டத்தில் உக்ரைன் வலு­வான செயற்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது என IMF தெரி­வித்­துள்­ளது.

‘IMF இன் முழு­மை­யா­ன கடன்­திட்­ட­மா­னது, ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இணையும்  உக்ரைகின் முயற்­சிக்கு உத­வி­யாக இருக்கும். நிர்­வா­கத்தைப் பலப்­ப­டுத்தல், ஊழல் ஒழிப்பு, சட்­டத்தின் ஆட்சி மற்றும் யுத்­தத்­தின்­பின்­ன­ரான வளர்ச்சிக்கான அடித்தளங்களை அமைத்தல் ஆகியற்றில் உக்ரைனிய அதிகாரிகள் முன்னேற்றம் கண்டுள்ளனர் என கெவின் கிறே கூறியுள்ளார்.

Exit mobile version