Tamil News
Home செய்திகள் திருகோணமலை: வறுமையால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலை: வறுமையால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

22-12-22 அன்று மூதூரில் வசித்து வந்த சிறுவன்  ராமூ  வறுமை பட்டினியில் வாடி உயிரிழந்துள்ளார்.

மூதூர் – 64ஆம் கட்டை – சகாயபுரம் கிராமத்தில் உள்ள மாணிக்கவிநாயகர் ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள வீதியில் குடியிருக்கும் வைரமுத்து ராமராஜன் என்ற சிறுவனே பட்டினியின் கொடுமையால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சகாயபுரம் கிராமம் போன்று பல கிராமங்களில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி பெருமளவு மக்கள் கவனிப்பாரற்று உள்ளனர். அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version