Tamil News
Home செய்திகள் இன்று முதல் மீண்டும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுகிறது

இன்று முதல் மீண்டும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுகிறது

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று (07) முதல் மூடப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை விடுத்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதற்கான அந்நியச் செலாவணி கிடைக்காமையால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

ஆயினும் போதுமான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் கையிருப்பில் உள்ளதால் அதற்கான தட்டுப்பாடு நாட்டில் நிலவாது என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version