ஆப்கானிஸ்தானின் 9 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்காவிட்டால், அகதிகள் குடிபெயர்வது அதிகரிக்கும் என்று தலிபானின் உயர்மட்ட தூதர் எச்சரித்துள்ளார்.
“இதே நிலைமை தொடர்ந்தால், ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் மக்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். அது உலகத்திலேயே பெருமளவில் அகதிகள் வெளியேற காரணமாகும்,” என்றார் தலிபான் அமைப்பின் வெளியறவு அமைச்சர்.