Tamil News
Home செய்திகள் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் காணி ஒன்றிலிருந்து மனித எச்சங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இறுதிக்கட்ட போர் நடவடிக்கையின்போது உக்கிர போர் நடைபெற்ற மண்ணாக ஆனந்தபுரம் உள்ளது.

இந்நிலையில் ஆனந்தபுரம் கிருஷ்ணர் கோவிலுக்கு அருகிலுள்ள காணி ஒன்றில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை இன்று (12) முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைபாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version