Home செய்திகள் இலங்கை போராட்டத் திடலில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் வன்முறை-கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்

இலங்கை போராட்டத் திடலில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் வன்முறை-கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு ஆகிய  காவல்துறைப் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அறியப்படுவோர் இன்று வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதுவரை 17 பேர் காயமடைந்துள்ளனர்

இதையடுத்தே இந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை மேல் மாகாணம் மற்றும்  கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு ஆகிய  காவல்துறைப் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version