Home செய்திகள் மட்டக்களப்பு,திருகோணமலை : எரிபொருளுக்காக வீதிகளில் காத்திருக்கும் மக்கள்

மட்டக்களப்பு,திருகோணமலை : எரிபொருளுக்காக வீதிகளில் காத்திருக்கும் மக்கள்

வீதிகளில் காத்திருக்கும் மக்கள்

வீதிகளில் காத்திருக்கும் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள்  பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை  தொடர்கின்றது. மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நடுத்தர தொழிலில் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன் விவசாயிகளும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருளை பதுக்கி வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைவருக்கும் எரிபொருள் சீரான முறையில் வழங்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான 6 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் அறிவித்துள்ளார்.

அதே போன்று திருகோணமலை தபால் நிலைய நாற்சந்தி வீதியில் எரி வாயு விநியோகம் நடைபெறவுள்ளதை அறிந்த  மக்கள் இன்று  மாலையில் இருந்து பல மணி நேரம் காத்திருந்த போதும் எரிவாயு விநியோகம் இடம் பெறவில்லை. இதையடுத்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மேலும் இலங்கையில்  டீசல்  தட்டுப்பாடும் ஒன்றாக காணப்படுகிறது. இதனால் அன்றாடம் உழைத்து வாழும் விவசாய அறுவடை சாரதிகள், டெக்டர் இயந்திர சாரதிகள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version