Tamil News
Home செய்திகள் கோட்டா குடும்பத்தோடு அமெரிக்கா பயணமானார்

கோட்டா குடும்பத்தோடு அமெரிக்கா பயணமானார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் இன்று அமெரிக்காவிற்கு பயணமானார்கள்.

கோட்டாபய  ராஜபக்ச, மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள்மற்றும் பேத்தி ஆகியோர் இன்று அதிகாலை 02.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் சிறப்பு விருந்தினர் அறையின் ஊடாக புறப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் முதலில் துபாய் சென்று பின்னர் அமெரிக்கா செல்வதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Exit mobile version