Tamil News
Home செய்திகள் தமிழக அரசினால் வழங்கப்பட்ட அரிசி மூடைகள் பதுக்கல்- பாவனைக்கு உதவாத நிலையில் கண்டுபிடிப்பு

தமிழக அரசினால் வழங்கப்பட்ட அரிசி மூடைகள் பதுக்கல்- பாவனைக்கு உதவாத நிலையில் கண்டுபிடிப்பு

தமிழக அரசினால் வழங்கப்பட்ட அரிசி மூடைகள் வவுனியா  – ஆசிக்குளம், மதுராநகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டட அறையில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கிராம மக்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. 

தமிழக அரசினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி அரிசி மூடைகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மதுராநகர் கிராமத்தில் சுமார் 1000 கிலோவிற்கும் மேற்பட்ட அரிசி மூடைகள்  கிராம அபிவிருத்தி சங்க கட்டட அறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த அரிசி மூடைகள் பழுதடைந்து புழுக்களும் வண்டுகளும் நிறைந்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டுள்ளது.

Exit mobile version