Home செய்திகள் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: ஐ,நா.வை நாடுவவதற்கு பேராயர் திட்டம்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: ஐ,நா.வை நாடுவவதற்கு பேராயர் திட்டம்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைஈஸ்டர் தாக்குதல் விசாரணை: ஈஸ்டர் தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராந்து வருவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நீதி கிடைக்க தங்களால் முடிந்தவரை முயற்சித்ததாகவும் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன என்றும் அவர் கூறினார்.

எனவே சர்வதேசத்துக்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் அதற்கு அர்த்தம் ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்வது என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்காக இலங்கையுடன் தொடர்பு வைத்திருக்கும் சக்தி வாய்ந்த நாடுகளையும் தாம் அணுகவுள்ளதாக கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.

இவ்வளவு நாட்களாக உள்நாட்டில் நீதி கிடைக்கும் என நம்பியமை காரணமாக மேற்கூறிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

Exit mobile version